சிவாஜி இந்தியத் திரைவானின் துருவ நட்சத்திரம் - சித்ரா லட்சுமணன் 1952 ஆம் ஆண்டில் தீபாவளி கொண்டாடிய தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் யாருக்கும் அப்போது தெரியாது -அந்த வருடத்து தீபாவளிக்கு மிகப் பெரிய சிறப்பை சேர்க்க ஒரு நடிகர் வரப் போகிறார் என்று. அந்த தீபாவளியன்று எல்லா ரசிகர்களையும் தன்னுடைய அபரிமிதமான நடிப்பாற்றலால் திரும்பிப்பார்க்க வைத்த அந்த நடிகரின் பெயர் சிவாஜி கணேசன். அவர் நடித்த முதல் திரைப்படமான பராசக்தி தீபாவளியன்றுதான் திரைக்கு வந்தது ஒரு நடிகனைப் பொறுத்தவரை முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்கக்கூடிய வாய்ப்பு அமைவது என்பது மிகப் பெரிய விஷயம். அந்த வாய்ப்பு சில கதாநாயகர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றாலும் அதில் எத்தனை பேர் முதல் படத்திலேயே தாங்கள் யார் என்பதை நிரூபித்திருக் கிறார்கள், எத்தனை பேர் முதல் படத்திலேயே வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் அப்படிப்பட்ட வர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். முதல் படத்திலேயே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது மட்டுமின்றி மிகப் பெரிய வெற்றியைக் குவித்த மிகச்சில நடிகர்களில் நடிகர்திலக
Posts
Showing posts from 2016
- Get link
- Other Apps
கலைஞரைக் காதலித்த கவியரசர் கண்ணதாசன் – சித்ரா லட்சுமணன் அபிமன்யு படத்தில் எம்.ஜி.ஆர். மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்திக் கொண்டிருந்த “சண்ட மாருதம்” என்ற பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றச் சென்றபோதுதான் அந்த நிறுவனத்தோடு கவிஞர் கண்ணதாசனுக்கு முதல் முதலாக தொடர்பு ஏற்பட்டது சேலத்திலே சண்டமாருதம் பத்திரிகையில் பணியாற்றிய போது முதன் முதலாக நாவலர் நெடுஞ்செழியனைப் பார்க்கவும் அவரது பேச்சைக் கேட்கவும் கண்ணதாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு கூட்டத்திலே பேசிய நெடுஞ்செழியனின் பேச்சு அவரைப் பெரிதும் கவர்ந்தது. அதற்குப் பிறகு நேரடியாக இல்லை என்றாலும் ஒரு விதத்தில் சண்டமாருதம் பத்திரிகையில் கண்ணதாசன் தனது வேலையை இழப்பதற்கும் அந்த பத்திரிகையே மூடப்படுவதற்கும் நெடுஞ்செழியன் காரணமாக அமைந்தார் நாவலர் நெடுஞ்செழியன் எழுதியிருந்த கட்டுரை ஒன்று அப்போது ஒரு பத்திரிகையில் வெளிவந்திருந்தது அந்தக் கட்டுரை கண்ணதாசனை மிகவும் கவர்ந்ததால் அதை சண்டமாருதம் பத்திரிகையில் மறுபிரசுரம் செய்ய விரும்பிய அவர் அச்சுக் கோப்பவரிடம் அந்த கட்டுரையை வெட்டி கொடுத்து அச்சு கோர்க்கச் சொன்னார் . சண